Thursday, July 23, 2020

நீர் பதுமராகம் – லோகேஷ் ரகுராமன் குறித்த இலக்கிய விவாதம்

*நீர் பதுமராகம்*

இச் சிறுகதையில் கிரேக்கக் கடவுள்கள் அப்போலா, அவரது தகப்பனார் சியுசு( Zeus) ஆகியோர் குறித்தான படைப்பு நிலைகள் விளக்கப்பட்டுள்ளது.
அப்போலா சூரிய கடவுளாகவும் செபையர் காற்றின் கடவுளாகவும் இவர்களின்  காதலனாக ஹயாசிந்த் திரிக்கப்பட்டு இக்காதல் போராட்டம் ஹயாசிந்த் மரணத்தில் முடிந்து அவரது இன்னொரு பரிணாமமாக உதயமாகிறது வாட்டர் ஹயாசிந்த் எனும் ஆகாயத்தாமரை.

வாரன் ஹேஸ்டிங்ஸ் தன் காதலி மரியம் பரோனஸ் வான் இன்ஹப் காக வழங்கும் ஆகாயத் தாமரை பூக்கள் பூமிப்பந்தின் நெற்றி பொட்டாக கிரேட் பிரிட்டன் மற்றும் ஏகாதிபத்திய குறியீடாக அழகு மிளிர விளக்கி பெருமையுடன் வழங்கப்படுகிறது காதலிக்கு வாட்டர் ஹயாசிந்த் எனும் ஆகாயத்தாமரை. காதல் தொடர்கிறது. அதன் வழியே இந்தியாவுக்கு உள்நுழைகிறது வாட்டர் ஹயாசிந்த்.

காலங்கள் நகர்கிறது.

இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளில் மிகுந்து விட்ட இதயத் தாமரைகளை அழிக்க நினைக்கும் அன்னம்மாள் ராஜம் தாவரவியல் பேராசிரியை தனது தோழி கிளாராவை தனக்கு உதவும்படி அழைக்கிறார். பூச்சியல் துறைசார்ந்த கிளாரா உலகத்தில் உள்ள பூச்சிகள் குறித்து அறிவர். பல்வேறு ஆராய்ச்சிக்கு பின்பு இறுதியில் ஆகாயத்தாமரைக்கு எதிர்வினையாற்றும் வண்டு ஐக்கார்னியா மூலம் ஆகாயத் தாமரைகள் நிறைந்த நீர் நிலைகள் தூய்மை அடைகின்றன என்று கதை முடிகிறது.

சிறுகதை முழுவதிலும் கிரேக்க கடவுள்களின் நிலைகளும் எகிப்திய கடவுள்களின் நம்பிக்கைகளும் இறுதி நிலைகளில் பூச்சிகளின் பயன்பாடுகளும் பரிணமிக்கிறது. நன்றி!

No comments:

Post a Comment